- பௌர்ணமி ஒளியில் கடற்கரை மணலில், தென்றலின் தீண்டலில் நீண்டநேரம் அமர்ந்திருத்தல்.
- கல்கி அவர்கள் வருணித்த வீர நாராயண ஏரியின் அழகை மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து இன்புறுதல்.
- மாலை நேரத்தில் மழை பெய்யும்போது அம்மா செய்து கொடுக்கும் வெங்காய பஜ்ஜியை சுடச்சுட சாப்பிடுவது.
- கொடைக்கானலில், சில்லென்ற குளிரில் காலை பொழுதில் நடந்து செல்வது.
- நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய Age Of Empires விளையாடுவது.
- அர்த்தராத்திரியில் Ice Cream சாப்பிடுவது.
- அலுவலகத்தில் Pressure இல்லாத Project மற்றும் குழப்பம் இல்லாத Team அமைவது.
- வார விடுமுறையன்று பத்து மணிவரை தூங்குவது. தவறி ஆறு மணிக்கு விழித்தால் கோவில் சென்று வருவது.
சென்ற மாதம் பிறந்த எங்கள் குழந்தை விஷ்ணுவை காணும் வரை..! அவன் மென்மையான சின்னஞ்சிறிய விரல்களை வருடும் வரை. !
அழுதாலும், தூங்கும் போது முனகினாலும் சந்தோசம் கொடுக்கும் பிஞ்சு குரலை கேற்கும் வரை..!
பிறந்து ஒரு நாள் வரை கையில் எடுக்காமல் பழகியவர்கள் தூக்குவதை பார்த்து கற்றுக்கொண்டு இரண்டாம் நாள் மிக பொறுமையாக என் கையில் எடுத்து அமர்ந்தபோது பொங்கிய சந்தோசம் வரை...!
குழந்தைக்கு முன் மற்ற சந்தோசமெல்லாம் மறந்து போனது எனக்கு.