குழந்தை வாய்ப்பேச பத்து மாதம்
ஆகும் என்கிறது அறிவியல்,
எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!
கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்
அருகில் சென்று வினாவினால்-
படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான்,
முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
கெஞ்சல், கோபம், அழுகை
என முகபாவங்களை தெளிவாகக்
காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி.
நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்.

அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்!

எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!
கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்
அருகில் சென்று வினாவினால்-
படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான்,
முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
கெஞ்சல், கோபம், அழுகை
என முகபாவங்களை தெளிவாகக்
காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி.
நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்.

அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்!
