Monday, October 20, 2008

பிஞ்சு விரல்கள்


  • பௌர்ணமி ஒளியில் கடற்கரை மணலில், தென்றலின் தீண்டலில் நீண்டநேரம் அமர்ந்திருத்தல்.
  • கல்கி அவர்கள் வருணித்த வீர நாராயண ஏரியின் அழகை மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து இன்புறுதல்.
  • மாலை நேரத்தில் மழை பெய்யும்போது அம்மா செய்து கொடுக்கும் வெங்காய பஜ்ஜியை சுடச்சுட சாப்பிடுவது.
  • கொடைக்கானலில், சில்லென்ற குளிரில் காலை பொழுதில் நடந்து செல்வது.
  • நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய Age Of Empires விளையாடுவது.
  • அர்த்தராத்திரியில் Ice Cream சாப்பிடுவது.
  • அலுவலகத்தில் Pressure இல்லாத Project மற்றும் குழப்பம் இல்லாத Team அமைவது.
  • வார விடுமுறையன்று பத்து மணிவரை தூங்குவது. தவறி ஆறு மணிக்கு விழித்தால் கோவில் சென்று வருவது.
இது போன்ற நிறைய விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன....





சென்ற மாதம் பிறந்த எங்கள் குழந்தை விஷ்ணுவை காணும் வரை..! அவன் மென்மையான சின்னஞ்சிறிய விரல்களை வருடும் வரை. !


அழுதாலும், தூங்கும் போது முனகினாலும் சந்தோசம் கொடுக்கும் பிஞ்சு குரலை கேற்கும் வரை..!

பிறந்து ஒரு நாள் வரை கையில் எடுக்காமல் பழகியவர்கள் தூக்குவதை பார்த்து கற்றுக்கொண்டு இரண்டாம் நாள் மிக பொறுமையாக என் கையில் எடுத்து அமர்ந்தபோது பொங்கிய சந்தோசம் வரை...!

குழந்தைக்கு முன் மற்ற சந்தோசமெல்லாம் மறந்து போனது எனக்கு.




Tuesday, October 14, 2008

மத்தாளக்கொம்பு நீர் ஊற்று


சமீபத்தில் விடுமுறையில் எங்கள் ஊரான திருப்பூருக்கு சென்றிருந்தேன். அப்போது சிறிய சுற்றுலாவாக கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மத்தாளக்கொம்பு நீர் ஊற்றுக்கு சென்று வந்தோம்.

வழி நெடுகும் இருபுறமும் இருந்த மரங்களும், பசுமை நிறைந்த வயல்வெளிகளும், ஆறுகளும் மற்றும் ஆங்காங்கே இருந்த சிறு குறு வாய்க்கால்களும் மனதிற்கு குளிர்ச்சியை தந்தன. இதை எல்லாம் விட்டுவிட்டு பாலைவனத்தில் ஏன் சென்று வாழ்கிறாய் என கேட்டன.

திரும்பும் வழியில் எனக்கு பன்னீர் சோடா ஆசை வந்தது. கொளப்பலூர் எனுமிடத்தில் நிறுத்தி சில கடைகளை விசாரித்து பின் ஒரு சோடா கடையை கண்டுபிடித்தோம். மிகச்சுவையான பன்னீர் சோடாவை இன்றண்டுமுறை வாங்கி குடித்தும் போதாமல், Aquafina Bottle நிரப்பியும் வாங்கினோம். இனத்துடன் விட்டோமா, Rose மில்க்-கையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் குடித்தபின் இன்னொரு Aquafina Bottle நிரப்பப்பட்டது (அலம்பல் தாங்க வில்லை என்கிறீர்களா?).

மிகவும் மகிழ்ச்சியான அந்த பயணத்தின் புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக..






எங்கள் ஊரைப்பற்றி ...

தொழில் நகரமான திருப்பூர் மிகவும் சுறுசுறுப்பான ஊர். இரவு பகல் பார்க்காது பின்னலாடை மற்றும் அது சார்ந்த தொழில்களில் உழைக்கும் மக்கள் வாழுமிடம். இந்தியாவின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் 60 சதவிகிதம் தயாரித்து வருடத்திற்கு 10,000 கோடி அளவிற்கு தொழில் செய்யும் நகரம். இங்கே விடுமுறை என வந்துவிட்டால் மக்கள் வீட்டில் இருப்பது அரிது என்றே சொல்லலாம். சிறகை விரித்துக்கொண்டு சுற்றுலா புறப்பட்டுவிடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் நகரத்தை சுற்றி நிறைய சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளது. நானும் அப்படி நிறைய முறை சென்றிருக்கிறேன். அனால் இப்பொழுதெல்லாம் திருப்பூருக்கு செல்வதே சுற்றுலாதான்.