Saturday, September 13, 2008

உலகின் வித்தியாசாமான திருவிழாக்கள் - II

இந்த பதிவின் திருவிழா தாய்லாந்து நாட்டில் கொண்டாடப்படுகிறது. அது நமது கலாச்சாராத்தை சார்ந்தது கூட.



1) திருவிழா : குரங்குகளுக்கு உணவளிக்கும் விழா ("Monkey Buffet Festival")
இடம் : "Pra Prang Sam Yot" கோவில், லோப்புரி மாநிலம், தாய்லாந்து.
நாள் : நவம்பர் மாத இறுதியில்
தோன்றல் : தெரியவில்லை.


விழா தினத்தன்று இந்த மிகப்பழமையான இந்து கோவிலின் முன் பலவகை பழங்களும் காய்கறிகளும் குரங்குகளுக்காக மேசைகளிட்டு வைக்கப்படும். குரங்குகள் உணவு உண்பதை விட அவை செய்யும் சேட்டைகளை காண மக்கள் கூட்டம் திரளும். குரங்குகள் கூடியிருப்பவர்களிடம் உள்ள பொருள்களையும் விட்டு வைக்காது. பிடுங்கி உண்பது அவைகளுக்கு குதூகலமான ஒன்று என்பது நாம் அறிந்தததே.


சிலர் விளையாட்டாக பழங்களை பெரிய பனிக்கட்டிக்குள் உறையவைத்து படைப்பர். புகைப்படம்கொடுத்துள்ளேன் பாருங்கள்.


இங்கே படைக்கும் உணவு எவ்வளவு தெரியுமா? சுமார் 2000 கிலோவிற்கும் மேல்.



விழா பற்றிய குறும்படங்கள் கொடுத்துள்ளேன், குரங்குகளின் சேட்டைகளைகண்டு மகிழுங்கள்.





இந்த விழாவைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது பழனி மலை தான்.

எனக்கு மிகவும் பிடித்த திருத்தலம். எங்கள் ஊரிலிருந்து இரண்டரை மணிநேரப்பயணம்தான் ஆதலால் அடிக்கடி குடும்பத்துடன் சென்று வருவோம். புளியோதரையும் தயிர் சாதமும் பாக்கு மட்டையில் கட்டிக்கொண்டுசெல்வோம்.
மலை ஏறும்போது "யானை பாதை"யில் தான் செல்வது வழக்கம். படிக்கட்டுகள் ஏறுவது கடினம் என்பதால் மட்டுமல்ல, யானைப் பாதையில்தான் nஅன்றாக வேடிக்கை பார்க்க முடியும் என்பதால் தான். மலைமேல் இருந்து பழனி நகரத்தையும் அதன்அருகாமையில் உள்ள ஏரியின் அழகையும் ரசிப்போம். வாகனங்களும் மக்களும் மிக சிறியதாகத் தெரியும். ஒவ்வொருவரும் அங்கேபார், இங்கேபார் எனசுட்டிக்காத்ட்இ மகிழ்வர். நாம் இப்போது நாடு விட்டு நாடு பறக்கிறோம் மிக உயரத்தில் இருந்தது உலகை ரசிக்கின்றோம். அனால் அப்போது எங்களுக்கு பழனி மலையேபெரியது.

அதைவிட முக்கியமாக குரங்குகளை யானை பாதையில் அதிகமாக இருக்கும், சேட்டைகளை காண மிக வசதியாக இருக்கும். அவை தாவி விளையாடுவதை காண மகிழ்ச்சியாக இருக்கும். நாம் உண்ணும் பொழுது குரங்குகள் சமயம்பார்த்து காத்திருக்கும், திடீரென பாய்ந்தது தட்டிக்கொண்டு செல்லும். சிலரின் கைப்பைகளைக்கூட உணவுப் பண்டம் என நினைத்து தட்டிச்செல்லும்.

சரி மீண்டும் தாய்லாந்து விழாவுக்கு வருவோம்.
குரங்குகளுக்காக இவ்வளவு பெரிய விழா எதற்க்காக?



திருவிழா வரலாறு:

விஷ்ணுவின் அவதாரமான ராமன் தன்னுடைய நிகரற்ற சீடனான ஹனுமனுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய கொடுத்ததாக மக்கள் நம்புகின்றனர். அதானாலேயே ஹனுமனின் வானர வம்சத்திற்கு ஆண்டு தோறும் மரியாதை செய்யும் விதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.





நன்றி ! விழாக்கள் தொடரும்.

No comments: