Tuesday, September 2, 2008

உலகின் வித்தியாசமான திருவிழாக்கள் - I


நம் ஊர்களில் தைப் பொங்கல், தீபாவளி, ஆங்கில மற்றும் தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்கள் மட்டுமே பிரபலம். ஆனால் உலக நாடுகளில் பல
வித்தியாசமான திருவிழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. நம்மவர்களுக்கு அவைகேலிக்கூத்து போல தோன்றும்.

அது போன்ற ஒரு விழா இந்த ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டில் நடந்தேறியது, அது "தக்காளி சண்டை" திருவிழா. அந்த செய்தி பார்த்து முடிக்குமுன் ஜப்பான் நாட்டில் சாம்பா திருவிழா நடந்தது.

வேறு என்னென்ன வித்தியாசமான திருவிழாக்கள் இருக்கின்றன என ஏன் ஒரு கூகிள் தேடல் விடக்க்கூடாது என்று தோன்றியது. அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு.


1) திருவிழா : La Tomatina "தக்காளி சண்டை"
இடம் : வேலன்சியா, ஸ்பெயின்
நாள் : ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை துவங்கி ஒரு வாரம்
தோன்றல் : 1945


திருவிழாவின்போது 20,000 - 40,000 மக்கள் கூடுவர். அருகில் உள்ள ஊர்களிலிருந்து பல லாரிகள் மூலம் தக்காளி கொண்டுவரப்படும். காலை பத்து மணிக்கு உயரமான வழுக்கு மரம் ஏறும் போட்டி துவங்கும். இப்போட்டியில் யாராவது வெற்றிகரமாக ஏறியபின் தக்காளி சண்டை துவங்கும். சரியாக ஒரு மணி நேரம் சண்டை நடைபெறும். பாதுகாப்புக்கு நீச்சல் கண்ணாடிகள் அவசியம்.

இந்த வருட திருவிழா ஆகஸ்ட் 27 அன்று நடந்தது.
தக்காளிச்சன்டையின் புகைப்படங்கள் சில ....

இதில் உள்ளூர் அதிகாரிகளுக்கு சிரமமே திருவிழாவிற்குபின் தான். ஊரை சுத்தப்படுத்துவதுதான் அவர்கள் தலைவலி. தீயணைப்பு வண்டிகள் பல தேவைப்படுமென்றால் யோசித்துப்பாருங்கள் .!!!


வரலாறு: இந்த திருவிழா தோற்றத்திற்கான காரணம் தெளிவாக இல்லை. ஆனால் பல கராணங்கள் கூறப்படுகின்றன

  • 1945 ல் ஒரு திருவிழா ( “giants and big-headeds”) ஊர்வலத்தின் பொது சில கிராமத்து சிறுவர்கள், தாங்களும் பங்கு கொள்ள முற்பட்டு தடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஊர்வலதினருடன் சண்டையிட்டனர். அருகில் இருந்த காய்கறி கடையிலிருந்த தக்காளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டார்கள். அதுவே ஆரம்பமாக கூறப்படுகின்றது.
  • ஒரு தக்காளி ஏற்றி வந்த சரக்குஉந்துக்கு விபத்து ஏற்ப்பட்டது. கிராமத்துவாசிகள் அதிலிருந்த தக்காளியை எடுத்து அடித்துக்கொண்டதில்துவங்கியதாகவும் கூறப்படுகின்றது. நின்று
  • மிகப்பிரபலமாக கூறப்படுவது, அரசு அதிகாரியை ஊர் மக்கள் தக்காளியால் அடித்தனர். அதனால் தான் தோன்றியதாக சொல்கின்றனர்.
காரணம் எதுவாக இருப்பினும், அதுவே ஒவ்வொரு வருடமும் வழக்கமாக மாறியது. ஐம்பதுகளில் அரசு தடை விதித்தது, மீறி வந்தவர்களை கெய்து செய்தது. 1955 ஆம் ஆண்டு மக்கள் தக்காளியை பெட்டியில் இட்டு சவ ஊர்வலம் நடத்தினர். ஆனாலும் மக்கள் கொண்டாடுவதை விடவில்லை. சில வருடங்களுக்கு பின்னர் அரசாங்க அங்கிகாரமும் கிடைத்தது.

தற்ப்போது சுற்றுலாப்பயணிகளை உலகெங்கிலும் இருந்து கவர்ந்திழுக்கும் அளவிற்கு பிரபலம்.

எல்லாம் சரி எவ்வளவு தக்காளி வீணாகும் என நினைக்கிறீர்களா? கொஞ்சம் தான் ! சும்மா 1,20,000 கிலோவுக்கும் மேல்!!!

மேலும் விழாக்கள் தொடரும்...