Saturday, March 14, 2009

கொஞ்சம் கடிக்கலாம் வாங்க

மின்னஞ்சலில் வந்தது ரசித்தேன்

"
யான் பெற்ற "கடி" பெருக இவ்வையகம்"


_______________

காதல் Justify Full ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

------------------------------

வாழை மரம் 'தார்' போடும் ஆனால்
அதை
வச்சு
நம்மால 'ரோடு' போட முடியாதே!

----------------------------------
கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது
வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


---------------------------------------

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,
ஆனால்
, அதால
லோக்கல் கால்,
எஸ்
.டி. டி.கால்,

.எஸ்.டி. கால்
ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.

---------------------------------------------
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது
என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside Mental outside !!!
-----------------------------------------------
சார்,
டீ
மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா
மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ்
மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

______________________________________________

மூன்று நீச்சல் குளம்

புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.

"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.

"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.

______________________________________________

என்னதான் மனுசனுக்கு வீடு வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறணும்னா ப்ளாட்பாரத்துக்கு வந்து தான் ஆகணும் . இது தான் வாழ்க்கை.


______________________________________________

வார இறுதி நாட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்.

நன்றி !


24 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லாஆஆஆ கடிக்குரீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

எப்படின்னே இப்படி? போட்டுத் தாக்குங்க.. நல்லா இருந்ததுங்கோவ்..

கணினி தேசம் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

எப்படின்னே இப்படி? //
ஏதோ நம்மால முடிஞ்சது..

கணினி தேசம் said...

நன்றி ஆ.ஞானசேகரன்.

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

நட்புடன் ஜமால் said...

கொஞ்சி கடிக்கிறியளோ நினைச்சிட்டேன்

நட்புடன் ஜமால் said...

சந்தோஷம் தோஷமாயிடிச்சா

புதியவன் said...

//நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside Mental outside !!! //

நல்ல காமெடி தொகுப்பு மிகவும் ரசித்தேன்...

அமுதா said...

:-))

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நம்ம ப்ளாக் பக்கம் வந்து போயிருக்காரே யாருன்னு பாக்கலாம்னு இந்த பக்கம் வந்தா இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு வெச்சிட்டீங்களே :((

நம்ம ப்ளாக் பக்கம் வந்ததுக்கு ஒரு நன்றிங்கோ :))

- இரவீ - said...

உங்க கடி கொசு கடி மாதிரி,
கடிக்கும் (படிக்கும்) போது வலிக்கல
படிச்சு (கடிச்சு) முடிச்சதும் வலிக்குது :))
ஹி ஹி ஹி ...

Anonymous said...

ஹாஹாஹா
நல்ல கடிதான் போங்க...

வால்பையன் said...

செம கடி
ஆனா நல்லாயிருந்தது

கணினி தேசம் said...

//புதியவன் said...

//நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside Mental outside !!! //

நல்ல காமெடி தொகுப்பு மிகவும் ரசித்தேன்...
//

நன்றி புதியவன்!


//அமுதா said...

:-))
//
நன்றி அமுதா!

கணினி தேசம் said...

//G3 said...//

வாங்க காயத்ரி

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
நம்ம ப்ளாக் பக்கம் வந்து போயிருக்காரே யாருன்னு பாக்கலாம்னு இந்த பக்கம் வந்தா இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு வெச்சிட்டீங்களே :((
//

அதான் சும்மா கொளுத்திபோட்டுட்டு ஓடி வர்றது!!
மாட்டிகிட்டீங்களா..!!

//
நம்ம ப்ளாக் பக்கம் வந்ததுக்கு ஒரு நன்றிங்கோ :))
//

உங்களுக்கும் நன்றிங்கோ.

கணினி தேசம் said...

//Ravee (இரவீ ) said...

உங்க கடி கொசு கடி மாதிரி,
கடிக்கும் (படிக்கும்) போது வலிக்கல
படிச்சு (கடிச்சு) முடிச்சதும் வலிக்குது :))
ஹி ஹி ஹி ...
//
இரவீ... இது அதவிட பெரிய கடி.

கி..கி..கி..!!

கணினி தேசம் said...

//கவின் said...

ஹாஹாஹா
நல்ல கடிதான் போங்க...
//
முதல் வருகைக்கு நன்றி கவின்

//வால்பையன் said...

செம கடி
ஆனா நல்லாயிருந்தது
//
வருகைக்கு நன்றி வால்பையன்!!

இருந்தாலும் உங்க அளவுக்கு கடிக்க முடியமா?

பழமைபேசி said...

நம்மூர்ப் பொன்னாந்தானா? பின்னிப் படல் எடுங்க இராசூ....

கணினி தேசம் said...

//பழமைபேசி said...
நம்மூர்ப் பொன்னாந்தானா? பின்னிப் படல் எடுங்க இராசூ....
//

ஆமுங்க நமக்கு திருப்பூருங்க.

எங்கூட்டுக்கு வந்ததுக்கு நன்றிங்க!

Poornima Saravana kumar said...

ஆஆஆஆ காதுல ஒரே ரத்தமா வடியுதே:(((((((

ஹேமா said...

கடி தாங்கல.ஓடிப் போயிடறேன்.

கணினி தேசம் said...

நன்றி Poornima Saravana kumar

நன்றி ஹேமா

நாமக்கல் சிபி said...

:)

நல்லா ரசிச்சேன்!

கணினி தேசம் said...

நன்றி நாமக்கல் சிபி.

Tech Shankar said...

இந்த கடியைச் சொல்லி திண்டுக்கல் சாரதி சிரிப்பார் பாருங்க.. அடடடா..

//வாழை மரம் 'தார்' போடும் ஆனால்
அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!