Sunday, March 29, 2009

பூமி நேரமும் நிலாச்சோறும்

மனைவியைப் பார்த்து "என்னம்மா முடிச்சாச்சா, இன்னும் பத்துநிமிஷம்தான் இருக்கு..?" என்றேன் "இன்னும் ஐஞ்சு நிமிஷம் ரெடியாகிடும்"என்றார். "மேகி செய்ய ரெண்டு நிமிட போதுமே, எதுக்கு இவ்வளவு நேரம்?"என்றேன் முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது (அவ்வவ்!). சிலநொடிமௌனத்திற்கு பின் "சேர், டேபிள் கொண்டுபோய் போட்டு ரெடி பண்ணுங்கவர்றேன்" (அப்பா தப்பிச்சேன்!).

அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மா, நான், மனைவி, குழந்தை எனஅனைவரும் அபார்ட்மென்ட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தோம், வீட்டின்அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. "பூமி நேரம்"கடைபிடிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு.

தெரு விளக்குகள் ஓரளவுக்கு பால்கனியை வியாபித்தன. சாப்பிடுவதற்கும்,குழந்தை பயப்படாதிருக்கவும் போதுமானதாயிருந்தது. அம்மாவின் கைகளால் சாத உருண்டை வாங்கிச் சாப்பிடவில்லையே தவிர,முழுமையாக நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவத்தை தந்தது.

இடையில் அம்மா கேட்டார்கள் "என்னப்பா பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.

--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

"நூறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது", "ஐந்து நாட்களுக்குள் தொடர்புகொள்ளவும், தாமதித்தால் வாய்ப்பு பறிபோய்விடும்".

"இருநூறு மில்லியன் டாலர்கள்" நைஜீரியா வங்கியில் கேட்பாரற்றுகிடக்கிறது தங்களின் பெயரும் இறந்துபோன அந்த கணக்குக்கு சொந்தக்காரரின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் உங்களை அணுகினேன். உடனேதொடர்புகொள்ளவும் பணத்தை சரிபாதியாக பங்கிட்டுகொள்வோம்".

மின்னஞ்சலில் பல வருடங்களாக வரும் இது போன்ற டுபாக்கூர்கள் அனைவரும் அறிந்ததே. இன்னும் சிலர் அப்பிராணிகள் இவர்களின் வலையில் விழுந்தாலும்,பெரும்பான்மையான மக்கள் முழித்துக் கொண்டார்கள்.

ஆனால், இந்தக்கும்பல் இப்போது புதிய யுக்தியை கையாள்கிறார்கள் .
குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். அதே தகவல்தான் அனான் ஊடகம்தான் வேறு. மக்கா சாக்கிரதை!!

"யாரும் எந்த தொடர்பும் இல்லாமல் நமக்கு கோடிக்கணக்கில் பணத்தைதரமாட்டார்கள், மீறி நம்புவது முட்டாள்த்தனம்" . (நான் சொல்றதசொல்லிபுட்டேன், அம்புட்டுதேன்!!)


--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

அப்பா: "பையனை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்க்கணும்"
அம்மா: "நேரம்காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும், அதனால் அத்துறை வேண்டாம்"
அப்பா: "அப்படியென்றால் மேலான்மைத்துரைதான் சரிவரும்"
அம்மா: "இல்லை, இல்லை! என் மகனை விமானி ஆக்குவதுதான் என் நோக்கம்".
அப்பா: "அதுபோக கண்டிப்பா விளையாட்டுத்துறையிலும் பிரகாசிக்கச் செய்யனும்"
விவாதம் தொடர்ந்தது.

ஆயாவின் கையில் இருந்த குழந்தை: "அவ்வ்வ்வ்வ்! இப்ப என்கூட ஒரு பத்து நிமிடம் விளையாட நேரம் ஒதுக்குங்க, போதும்"


19 comments:

நட்புடன் ஜமால் said...

ஊருக்கு நல்லது செய்

இது

உலகுக்கே நல்லது செய்

G3 said...
This comment has been removed by the author.
G3 said...

நிலாச்சோறு குடுக்கற சந்தோஷமே தனி தான் :))

****

எனக்கு தெரிஞ்சவரை 90% மக்கள் தெளிவா இருக்காங்க. ஏமாறுபவர்கள் ரொம்பவே கம்மி தான் :) அவங்களும் கூடிய சீக்கிரம் தெளிஞ்சிடுவாங்கன்னு நம்புவோம் :)

*****

கடைசி பகுதி நிதர்சனம் !!

*இயற்கை ராஜி* said...

இடையில் அம்மா கேட்டார்கள் "பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.
///

same bloood:-((

கணினி தேசம் said...

//நட்புடன் ஜமால் said...

ஊருக்கு நல்லது செய்

இது

உலகுக்கே நல்லது செய்
//

அதுபோக தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஒருமணிநேர விடுமுறை (அதுவும் மாலை வேளையில்!!)

நன்றி ஜமால்.

கணினி தேசம் said...

G3 said...

// நிலாச்சோறு குடுக்கற சந்தோஷமே தனி தான் :)) //

எந்த ஸ்டார் ஹோட்டலும் இதற்கு இனையாகுமா?

****

// எனக்கு தெரிஞ்சவரை 90% மக்கள் தெளிவா இருக்காங்க. ஏமாறுபவர்கள் ரொம்பவே கம்மி தான் :) அவங்களும் கூடிய சீக்கிரம் தெளிஞ்சிடுவாங்கன்னு நம்புவோம் :) //

சமீபத்தில் கூட நண்பர் ஒருவர் இவர்களின் வலையில் விழ இருந்தார். அதனால் தான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்



*****

// கடைசி பகுதி நிதர்சனம் !! //

நன்றி காயத்ரி (G3)

கணினி தேசம் said...

இய‌ற்கை said...

இடையில் அம்மா கேட்டார்கள் "பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.
///

same bloood:-((

//
Why why, You too same blood! Oh God....What a pity.!! What a pity.!!

வருகைக்கு நன்றி இய‌ற்கை.

Prabhu said...

///ஆயாவின் கையில் இருந்த குழந்தை: "அவ்வ்வ்வ்வ்! இப்ப என்கூட ஒரு பத்து நிமிடம் விளையாட நேரம் ஒதுக்குங்க, போதும்"
/////

என்னங்க குழந்தை கூட வடிவேலு மாதிரி கூவுது!

///இடையில் அம்மா கேட்டார்கள் "பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.
///

என்ன மாதிரி மறதி மன்னர்களாக இருப்பார்கள். எனக்கு அடுத்த நாள் எட்டுக்கு தான் நினைவு வந்திருக்கு!

பழமைபேசி said...

:-o)

tamilish??

கணினி தேசம் said...

வாங்க பழமைபேசி
//
tamilish??
//

Tamilish சரியா வேலை செய்ய மாட்டேங்குது. முக்கியமா "Submit New" அழுத்தினா தூங்கிடுது. எனக்கு மட்டும்தான் இந்த கொடுமையா?

கணினி தேசம் said...

வாங்க பப்பு
// என்னங்க குழந்தை கூட வடிவேலு மாதிரி கூவுது! //

குழந்தையும் டீ.வீ பார்க்குது அதான். :-))


//என்ன மாதிரி மறதி மன்னர்களாக இருப்பார்கள். எனக்கு அடுத்த நாள் எட்டுக்கு தான் நினைவு வந்திருக்கு! //

அவனா நீ?

புதியவன் said...

//இடையில் அம்மா கேட்டார்கள் "என்னப்பா பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?". விடை எனக்கும் தெரியவில்லை.//

இந்தக் கேள்விக்கு பதில் இல்லைன்னு தான் நினைக்கிறேன்...

பூமி நேரத்தில் நிலாச் சோறு...நல்லதொரு சுவாரசியமான பதிவு...

அ.மு.செய்யது said...

//ஆயாவின் கையில் இருந்த குழந்தை: "அவ்வ்வ்வ்வ்! இப்ப என்கூட ஒரு பத்து நிமிடம் விளையாட நேரம் ஒதுக்குங்க, போதும்"//

நச்........அசத்தல் கணினி !!!!!!

பூமிநேரமும் ரசித்தேன்.இண்ட்ரஸ்டிங்..

Poornima Saravana kumar said...

என்னப்பா பூமி நேரம்னு சொல்ற, அனாநம்ம வீட்டைத்தவிர எல்லா வீட்டுலையும் விளக்கு எரியுதே?//

ஹை!!!

நல்லா இருக்கே....

ஹேமா said...

பூமி நேரம்" எனக்குப் புரியவில்லை கணணி.

எங்கே உங்களை என் இரண்டு பதிவுகளிலும் நீண்ட நட்களாகக் காணவில்லை.வாங்க.

கணினி தேசம் said...

நன்றி புதியவன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி Poornima Saravana kumar

கணினி தேசம் said...

வாங்க ஹேமா,

//பூமி நேரம்" எனக்குப் புரியவில்லை கணணி. //
"Earth Hour" என்பதைத்தான் தான் பூமி நேரம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
மேலும் தகவலுக்கு www.earthhour.org யில் பாருங்கள்.


// எங்கே உங்களை என் இரண்டு பதிவுகளிலும் நீண்ட நட்களாகக் காணவில்லை.
//
இரண்டு பதிவு... நீண்ட நாட்களா? ங்கே!!
இதெல்லாம் கொஞ்சம் ஓவரு. (ச்சும்மா..!! )
அதிக நேரம் என் குழந்தையுடன் செலவழிக்கிறேன். அதுதான் காரணம்.

//வாங்க.//
வந்துடுவோம்.

வால்பையன் said...

//"இருநூறு மில்லியன் டாலர்கள்" நைஜீரியா வங்கியில் கேட்பாரற்றுகிடக்கிறது தங்களின் பெயரும் இறந்துபோன அந்த கணக்குக்கு சொந்தக்காரரின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் உங்களை அணுகினேன். உடனேதொடர்புகொள்ளவும் பணத்தை சரிபாதியாக பங்கிட்டுகொள்வோம்".//

எனக்கும் வந்தது!
தமாசா என்ன மாதிரி உதவி எதிர்பார்க்குறிங்கன்னு பதில் எழுதிருக்கேன்!
பணம் கேட்டா நீங்க கொடுங்கன்னு கேட்பேன்!

அமுதா said...

/*ஆயாவின் கையில் இருந்த குழந்தை: "அவ்வ்வ்வ்வ்! இப்ப என்கூட ஒரு பத்து நிமிடம் விளையாட நேரம் ஒதுக்குங்க, போதும்"*/
:-)